Tuesday, February 10, 2009

தொலைதூர இருளில்................!

இரவுப் பனியின்
இனிமையான குளிர்

பெளர்ணமி நிலவின் ஒளி
உதய தரிசன சூரியனின் இளஞ் சூடு

மல்லிகைப் பூக்களின் தூய்மை - அதன்
திகட்டாத மணம்

என் அம்மா என்னிடம் காட்டிய
விலை மதிப்பிட முடியா அன்பிலும் உச்ச அன்பு

தந்தையின் அன்பான
அரச கட்டளை

சிறு வயதில் சகோதரன் தொட்டதெற்கெல்லாம்
என்னோடு போட்ட போட்டி

இறைவனிடம் இருப்பதாய் கேட்ட
மன்னிக்கும் மனப்பாங்கு

புல்லாங்குழக்குச் சொந்தமான
இன்னிசைக் குரல்

மலர்களின் காதலி
சிவப்பு ரோஜாவின் செவ்விதழ்

பெண்வுருவச்சிலை மட்டும் செதுக்குமொரு
சிற்பியின் திருவிளையாடல்

மூங்கிலின் இலைகளை தாங்கி நிற்கும் - அதன்
அதிகப்பிரசங்கி தனமான கால்கள்

ஒன்றேனும் உதிர்ந்தாலும் மானம் போனதாய்
எண்ணிய மான்புமிகு கவரிமானின் கூந்தல்

இறைவன் உயிர்க்கொடுத்த மீன்களில் தவறுதலாயிரு
மீன்களுரு மாரியது போன்ற கண்கள்

இத்தனையும் மொத்தமாய்ச் சேர்ந்தவொரு பெண்ணவளை
தொலைதூர இருளில் பார்த்தேன்.......................!!!

அந்த உத்தமியென் வாழ்நாள்
காதலியானால்....................!!!

1 comment:

Sinthu said...

இவையாவும் ஒரு மனிதனுக்குக் கிடைத்தால் அவன் சொர்க்கத்தை இங்கேயே காணலாமே................
கட்பணி அபாரம்....