Friday, April 3, 2009

பூ இலை முள் பனி



முட்களுக்கிடையில்
பூத்த மலருக்கு
இதழ் மென்மையினை
மறைக்க முடிந்ததா..?

முட்களுக்கிடையில்
பூ மலர்ந்தும்
முள் குத்தி மலருக்கு
ரத்தம் வலிந்ததா..?

பனித்துளிகளை
இலைகள் தாங்கி
நின்றபோதும்
இலையோடு பனித்துளிக்கு
ஒட்டமுடிந்ததா..?

இலையரும்பில்
மொட்டுதித்து
மலர்களை பிரசவித்த
போதும் இலைகளால்
மலர் போல் மணக்க
முடிந்ததா..?

எனது அன்பு
உரமாகியும்
உனது கண்ணீர்
நீராகியும்
மலர்களால்
உதிராமல்
நிலைக்க
முடிந்ததா..?