Wednesday, March 18, 2009

வெறுமைக்கு விடை தேடி.!

திரும்பிப் பார்க்கிறேன்
வெறுமை தெரிகிறது!
நிழல் கூட முகம்
திருப்பிக் கொள்கிறது!

வெட்கப்பட்டா.?
துக்கப்பட்டா.?
பதிலின்றியா.?

மணலில் சிதறிக்கிடந்த
நீர்த்துளிகள்.!

வெறுமைக்கு விடை தேடி
வெப்பமேறிக்கிடந்த
மணலில் குப்புறச் சயனித்தேன்!
மணலை முத்தமிட்டது உதடுகள்!

உதட்டோரத்தில் பதிலுக்கு
முத்தமிட்ட நீர்த்துளியொன்று!

உப்புச்சுவை கைத்துப்போனது!
இல்லை
இவை நீர்த்துளிகள் இல்லை!

உழைத்து உழைத்து
முறுக்கேறி பின்
உதிர்ந்துப்போன உதிரமாம்
வியர்தைத்துளிகள்!
மிஞ்சினால் எவனோ
தொலைத்து விட்டுப்போன
கண்ணீர்த்துளிகள்!

மரத்துப் போன
முட்டாள் மனிதா..!

வியர்வைத்துளியோ.!
கண்ணீர்த்துளியோ.!
தொலைத்துப் போனதேனடா.!
உனக்குன் பாட்டன் சேர்த்த
உத்தமச் சொத்து
இதொன்று தானடா.!

நீ தொலைத்த
வியர்வைத்துளிகள்
விற்கப்பட்டு கொள்ளை
லாபமாம்
விற்றுத்தின்ற
கொள்ளை கூட்டம்

ஏப்பம் விட்டுச் சொல்கிறது!

உன் கண்ணீர்த் துளிகள்
மிச்சமிருப்பதாய்
விளம்பரம் பார்த்தேன்!
காப்பாற்றிக்கொள்!

இன்று நீ அலையவிடப்பட்ட
ஆயுள் கைதி!

என் வெறுமைக்கு
விடை..?

Wednesday, March 4, 2009

காதல் ரப்பர் முத்திரை

தொண்டைக்கும் நெஞ்சுக்கும்
இடைப்பட்ட குரல்வளை நாதத்தில்
சிக்கிக்கிடக்கிறது காதல்

அன்பின் மறுபெயர் காதல்
பாசத்தின் இருப்பிடம் காதல்
ஆன்மீக பற்றின் இடைச்சுவர் காதல்
முக்தியின் அடித்தளம் காதல்
ஏற்றுக்கொள்கிறேன்

மோகத்துக்கும் காமத்துக்கும்
இடைப்படட இடைத்தரகர் காதல்
என்றால் முடியவில்லை ஏற்றுக்கொள்ள

காதல் ஒன்றும் சப்பித்துப்பிவிட்டு
போகும் கரும்புச்சக்கையல்ல
இனிக்கும் போது மட்டும்
இனிப்பை தேடியழையும்
எறும்புகளைப் போல

நீங்கள் செய்யும் அந்த
அறுவருப்பான உறவுக்கு
காதலென்ற முகமூடி
அணிவித்து காதலை தூக்கிலிட
நேரம் குறிக்காதீர்கள்

காதல் நிகழ்கால
ஒப்பந்தக் கூண்டில்
ஒப்புதலின்றி நிற்கிறது
சந்தர்ப்ப சூழ்நிலையின்
சூன்ய பிரதேசமானதா காதல்

உங்கள் காதல்
உங்கள் காற்சட்டையில்
உறங்கி கிடக்கும் பணப்பையின்
பாரத்தில் நடனமாடுகிறது.

உல்லாச விடுதியின்
படுக்கையறைக்கும்
ஆளில்லா சினிமாக் கொட்டகையின்
இருக்கைக்கு அடியிலும்
கழுத்திருகிப் போய் அவலக்குரல்
விடுகிறது உங்கள்
காதல்

இன்றைய சாஜகான்கள்
காதலுக்காய் காதலிக்காய்
சமாதிக்கட்டியிருக்கிறார்கள்
கைத்தெலைபேசியில்

உங்கள் உணர்ச்சியெனும்
வாளினால் காதலின்
கழுத்தை வெட்டி
ரத்தம் குடித்து காதலை
உயிரருத்து ஊசலாடவைப்பதுதானா
உங்கள் நோக்கம்...!