வேண்டிக்கொள்கிறேன்......!
யாரும் தமிழ் வளர்க்க
தேவையில்லை - தமிழ்
நன்றாகவே வளர்ந்திருக்கிறது......!
தமிழ் வளர்ப்பதாய்ச் சொல்லி
உங்கள் தீட்டாத கத்தியினால்
வெட்டி தமிழை மொட்டையாக்கி
விடாதீர்கள்.......!
தமிழை அதன் தன்மானத்தோடு
வாழவிடுங்கள்.......!
உங்கள் பட்டப்படிப்பு தேவையில்லை
தமிழை வாழவைக்க.......!
தமிழ் உங்கள் ரத்தத்தில்
ஊறியிருக்க வேண்டும் ........!
அதற்கு உங்கள் அன்னை பாலுட்டும் போதே
தமிழையும் சேர்த்திருக்க வேண்டும்.........!
No comments:
Post a Comment